_
பங்கின் வரலாறு
கி.பி 1905ல் மையனூரில் இருந்து மொன்னான் குடும்பத்தை சார்ந்த தாவீது என்பவர் தனியாக வந்து நான்கு மாதங்களாக குறவர்களோடு தங்கியிருந்தார். பிறகு அப்பு கவுண்டர் என்பவர் அவருடன் வந்து சேர்ந்தார். அதன் பிறகு மேமாலூர் விரியூர் எறையூர் போன்ற ஊர்களிலிருந்து சில கிறிஸ்துவ குடும்பங்கள் இளையாங்கண்ணியில் தங்கி விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர். தங்களின் வழிபாட்டிற்காக ஒரு கோயில் கட்டினர். இங்கு வந்த சில ஆண்டுகளில் பாஸ்கா நாடகம் நடத்தினர். இருதயம்பட்டு பங்கின் கிளைபங்காக இருந்த இளையாங்கண்ணியில் 1911-ல் ஒரு நல்ல ஆலயம் கட்டப்பட்டு 1938ல் அருட்பணி பி.ஜெ.ஜேக்கப் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. பங்கு இல்லமும் உருவானது.
கிராமத்தான் குடும்பத்தை சார்ந்த அப்பாவு என்பவர் ஆலயத்திற்கு நிலத்தை வழங்கினார்.
1953-ல் அருட்பணி ஜே.சி.ராயன் பொறுப்பில் இளையாங்கண்ணி தனிப் பங்காக உருவானது. இந்த பங்குத்தந்தை தலித் இந்து மக்களை மதம் மாற்றினார். 1958-ல் பலவித எதிர்ப்புகளையும் தாண்டி தலித் கிறிஸ்துவர்களை ஆலயத்தில் சமமாக பங்கேற்க செய்தார்கள். பங்குத்தந்தை மிகவும் கண்டிப்புடன் இருந்ததால் மக்கள் எதிர்ப்பின் காரணமாக மைக்கேல்புரத்தில் தங்கி பணி செய்தார். மலைக்கோவில் உள்ள இடத்தில் சின்ன கூரைக்கோவில் கட்டி மக்கள் நம்பிக்கையுடன் செபித்து வந்துள்ளனர்.
அருட்பணி அ.கரோப் ஆநுP இளையாங்கண்ணியில் மூன்று நாட்கள் மைக்கேல்புரத்தில் மூன்று நாட்கள் என தங்கி பணி செய்தார். மக்களின் தேவைக்காக சிமென்ட் ஓடு போட்ட சமுதாய கூடம் கட்டினார்.
1970-ல் வேலூர் மறைமாவட்டத்துடன் இளையாங்கண்ணி பங்காக இணைந்தது. 16.03.1970 பங்கின் பொறுப்பை அருட்பணி கே.பி. குரியன் ஏற்றார்.
தந்தை அவர்களின் முயற்சியால் மேரி மக்கள் கன்னியர்கள் பங்கிற்கு வந்து இல்லம் அமைத்தனர். மக்களின் நலனுக்காக அருமையான பல வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவானது. பேருந்து வசதி இல்லாததால் மருத்துவமனை சரியாக செயல்படாமல் மினி ஹெல்த் சென்டராக மட்டும் செயல்படுகிறது.
டி.எம் சகோதரிகள் கல்விப்பணி ஆலய சமுதாய பணி மருத்துவபணிகளை செய்கின்றனர். ஆர்வமுடன் வீடுகளை சந்திக்கின்றனர்.
ஆரம்பப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக மாறியது. பெருந்துறைப்பட்டு கரும்பலூர் தானிப்பாடி ஆலயங்கள் கட்டப்பட்டன. மறைபோதகபணி சிறப்பாக நடந்துள்ளது. குறிப்பாக தானிப்பாடியில் மனமாற்றம் நடந்துள்ளது. மக்கள் சிறப்பாக குடும்ப செபம் செய்ய ஊக்குவிக்கப்பட்டது. மாலையில் எல்லா வீடுகளிலும் குடும்ப செபமாலை சொல்வது அழகாக இருக்கும்.
7.08.1982-28.07.1991 அருட்பணி பிலோமின்ராஜ் பங்குதந்தையாக சிறப்பாக பணி செய்தார். மலைக்கோவில் அழகாக கட்டப்பட்டது. மற்றும் மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகள் கட்டப்பட்டன. ஓவ்வொரு சனிக்கிழமைகளிலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்தார்கள். மக்கள் நம்பிக்கையுடன் பிற நாட்களிலும் வந்து செபித்து நலன்களை பெற்றார்கள். இன்றும் பெற்று வருகிறார்கள்.
15.12.1990 தற்போது உள்ள அழகிய ஆலயம் திறக்கப்ட்டது. அருட்தந்தை பிலோமின்ராஜ் அவர்களின் பெரு முயற்சியினாலும் மக்களின் ஒத்துழைப்பினாலும் கட்;டப்பட்டது. இதற்கு இந்து சகோதரர்களும் பெரிதும் உதவி செய்திருக்கின்றனர்.
1986 1991 மலையடிவாரத்தில் புதிய பள்ளி கட்டிடங்கள் உருவாயின. பாஸ்கா மேடையாக அமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாஸ்கா ஒளி ஒலி காட்சி சிறப்பாக தயாரிக்கப்பட்டு விளம்பரம் செய்து நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்து பார்க்கின்றனர். ஒளி ஒலி காட்சி ஊருக்கே பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்துள்ளது.
ஊருக்கு பேருந்தும் தபால் நிலையமும் வந்தது.
அருட்தந்தை அமிர்தநாதன் (27.07.1991-13.08.1993) ஆலய மேற்கோபுரம் திருத்தி அமைத்தார்,கல்லறைகள் வரிசையாக அமைத்து ஒழுங்கு செய்தார்.
அருட்தந்தை வனத்தையன் (21.07.94-20.07.95) 1995ல் உயர்நிலைப்பள்ளி உருவானது 21.04.1995ல் நாவக்கொல்லை ஆலயம் திறக்கப்பட்டது.
அருட்தந்தை பங்கிராஸ் (21.07.1995-20.08.1997) ஆலயத்திற்கு மின்விசிறிகள் அமைக்கப்பட்டன.
அருட்தந்தை எல்.சூசைநாதன் (20.08.1997-14.06.2004) கல்வி வளர்ச்சிக்காக 9.07.2001ல் மேல்நிலைப்பள்ளியும் இதற்கான கட்டிடங்களும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. அருமையான மூன்று மாடி கட்டிடம் மாணவர்கள் தங்கி படிக்கக் கட்டபட்டது. கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு அதிக அளவில் தந்தை அவர்களால் செய்யப்பட்டுள்ளது. பங்கில் அதிக அளவு மாணவர்கள் படிக்க பங்குதந்தையின் முயற்சி பாராட்டதக்கது. மக்கள் பெருக்கத்தினால் சூசைநகர் உருவாகி அங்கு சலேத் மாதா ஆலயமும் கட்டப்பட்டது.
அருட்தந்தை ஐ. ஆரோக்கிய சாமி 15.06.2004ல் பொறுப்பெடுத்து 21.05.2005 வரை பங்குதந்தையாக செயல்பட்டார். இவர் காலத்தில் புனித ஆரோக்கிய அன்னை கெபி கட்டி திறக்கப்பட்டு மாதத்தின் இரண்டாவது சனிகிழமை திருப்பலி கொண்டாடபடுகிறது.
அருட்தந்தை ரா. மரியதாசன் (22.05.2005-25.05.2008)பங்குதந்தையாக பணியாற்றினார். மக்களின் நீண்ட நாள் விருப்பமான கார்மேல் அன்னை திருத்தலம் இளையாங்கண்ணியில் மக்கள் குடியேறி 100 ஆண்டுகள் நிறைவாக ஊர்காரியகாரர்கள் மற்றும் இறைமக்களின் தாராள நிதி உதவியோடு ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு பேரருட்திரு தந்தை மா. ஜோ. லூர்துசாமி அவர்களால் 15.07.2005 அன்று அர்ச்சிக்கபட்டது. ஆரம்பபள்ளிக்கென்று போதிய கட்டிட வசதி இல்லாததால் நான்கு வகுப்பறைகள் கொண்ட மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மண்ணின் மைந்தர்கள்
பேரருட்தந்தை. A.C.சவரிமுத்து Vellore diocese
பேரருட்தந்தை. R.அந்தோனி Tespour diocese
அருட்தந்தை. A.அபிரகாம் அந்தோனி Simla diocese
அருட்தந்தை. Y.ஆரோக்கியசாமி Vellore diocese
அருட்தந்தை. சூசை Popal diocese
அருட்தந்தை. D.ஸ்டனிஸ்லாஸ் Vellore diocese
அருட்தந்தை. L.C.பிலவேந்திரன் Ooty diocese
அருட்தந்தை. இரட்சகன் Vellore diocese
அருட்தந்தை. A.மோட்சநாதன் Vellore diocese
அருட்தந்தை. S.ஜோசப் ராஜா
அருட்தந்தை. மத்தேயு Vellore diocese
அருட்தந்தை. S.ஆரோக்கிய சாமி ocd
அருட்தந்தை. D.பிரான்சிஸ் somescan
அருட்தந்தை. G.ஆன்ரு sdm
அருட்தந்தை. A.ஜோசப் Vellore diocese
அருட்தந்தை. பிரான்சிஸ் msfs
அருட்தந்தை. இருதய சாமி Vellore diocese
அருட்தந்தை. பால்ராஜ் Capuchin
அருட்தந்தை. M.பீட்டர்ராஜ் Vellore diocese
அருட்தந்தை. G. பீட்டர் ராஜ் Vellore diocese
அருட்தந்தை. D. பெலிக்ஸ் Varanasi diocese
அருட்தந்தை. அந்தோனி சாமி Varanasi diocese
அருட்தந்தை. G.ஜோசப் ocd
அருட்தந்தை. சின்னப்பன் Pareli diocese
அருட்தந்தை. ஆரோக்கிய ராஜ் Vellore diocese
அருட்தந்தை. A.ஜான்பிரிட்டோ Varanasi diocese
அருட்தந்தை. M.ஏசுதாஸ் Vellore diocese
அருட்தந்தை. பிலிப் தயானந் cmf
அருட்தந்தை. ஆரோக்கிய சாமி osm
திருவிழாக்கள்
1. பாஸ்கா ஒளி ஒலி காட்சி உயிர்த்த ஆண்டவரின் தேர் திருவிழா
2. ஜூலை 16 கார்மேல் அன்னை பெருவிழா பங்கின் திருவிழா
3. மே மாதம் 3-வது சனிக்கிழமை சலேத் அன்னையின் தேர்திருவிழா
4. செப்டம்பர் 8 ஆரோக்கிய அன்னை திருவிழா நாவக்கொல்லை கிளைப்பங்கு.
5. மே 24 சகாய அன்னை திருவிழா சகாய அன்னை கெபி.
பங்குத்தந்தையர்கள்
அருட்தந்தை. ஜே.சி. ராயன் 31.10.1953
அருட்தந்தை. கரோப் 1963
அருட்தந்தை. வல்லப்பநாதர்.
அருட்தந்தை. குரியன் 16.03.1970
அருட்தந்தை. பிலோமின் ராஜ் 8.07.1982
அருட்தந்தை. அமிர்தநாதன் 29.07.1991
அருட்தந்தை. பவுல் ராஜ ரீகம் 14.08.1993
அருட்தந்தை. வனத்தையன் 20.06.1994
அருட்தந்தை. பங்கிராஸ் 21.07.1995
அருட்தந்தை. சூசைநாதன் 21.08.1997
அருட்தந்தை. ஆரோக்கிய சாமி 15.06.2004
அருட்தந்தை. மரியதாசன் 22.05.2005
அருட்தந்தை. ஜான் போஸ்கோ 26.05.2008
கி.பி 1905ல் மையனூரில் இருந்து மொன்னான் குடும்பத்தை சார்ந்த தாவீது என்பவர் தனியாக வந்து நான்கு மாதங்களாக குறவர்களோடு தங்கியிருந்தார். பிறகு அப்பு கவுண்டர் என்பவர் அவருடன் வந்து சேர்ந்தார். அதன் பிறகு மேமாலூர் விரியூர் எறையூர் போன்ற ஊர்களிலிருந்து சில கிறிஸ்துவ குடும்பங்கள் இளையாங்கண்ணியில் தங்கி விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர். தங்களின் வழிபாட்டிற்காக ஒரு கோயில் கட்டினர். இங்கு வந்த சில ஆண்டுகளில் பாஸ்கா நாடகம் நடத்தினர். இருதயம்பட்டு பங்கின் கிளைபங்காக இருந்த இளையாங்கண்ணியில் 1911-ல் ஒரு நல்ல ஆலயம் கட்டப்பட்டு 1938ல் அருட்பணி பி.ஜெ.ஜேக்கப் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. பங்கு இல்லமும் உருவானது.
கிராமத்தான் குடும்பத்தை சார்ந்த அப்பாவு என்பவர் ஆலயத்திற்கு நிலத்தை வழங்கினார்.
1953-ல் அருட்பணி ஜே.சி.ராயன் பொறுப்பில் இளையாங்கண்ணி தனிப் பங்காக உருவானது. இந்த பங்குத்தந்தை தலித் இந்து மக்களை மதம் மாற்றினார். 1958-ல் பலவித எதிர்ப்புகளையும் தாண்டி தலித் கிறிஸ்துவர்களை ஆலயத்தில் சமமாக பங்கேற்க செய்தார்கள். பங்குத்தந்தை மிகவும் கண்டிப்புடன் இருந்ததால் மக்கள் எதிர்ப்பின் காரணமாக மைக்கேல்புரத்தில் தங்கி பணி செய்தார். மலைக்கோவில் உள்ள இடத்தில் சின்ன கூரைக்கோவில் கட்டி மக்கள் நம்பிக்கையுடன் செபித்து வந்துள்ளனர்.
அருட்பணி அ.கரோப் ஆநுP இளையாங்கண்ணியில் மூன்று நாட்கள் மைக்கேல்புரத்தில் மூன்று நாட்கள் என தங்கி பணி செய்தார். மக்களின் தேவைக்காக சிமென்ட் ஓடு போட்ட சமுதாய கூடம் கட்டினார்.
1970-ல் வேலூர் மறைமாவட்டத்துடன் இளையாங்கண்ணி பங்காக இணைந்தது. 16.03.1970 பங்கின் பொறுப்பை அருட்பணி கே.பி. குரியன் ஏற்றார்.
தந்தை அவர்களின் முயற்சியால் மேரி மக்கள் கன்னியர்கள் பங்கிற்கு வந்து இல்லம் அமைத்தனர். மக்களின் நலனுக்காக அருமையான பல வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவானது. பேருந்து வசதி இல்லாததால் மருத்துவமனை சரியாக செயல்படாமல் மினி ஹெல்த் சென்டராக மட்டும் செயல்படுகிறது.
டி.எம் சகோதரிகள் கல்விப்பணி ஆலய சமுதாய பணி மருத்துவபணிகளை செய்கின்றனர். ஆர்வமுடன் வீடுகளை சந்திக்கின்றனர்.
ஆரம்பப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக மாறியது. பெருந்துறைப்பட்டு கரும்பலூர் தானிப்பாடி ஆலயங்கள் கட்டப்பட்டன. மறைபோதகபணி சிறப்பாக நடந்துள்ளது. குறிப்பாக தானிப்பாடியில் மனமாற்றம் நடந்துள்ளது. மக்கள் சிறப்பாக குடும்ப செபம் செய்ய ஊக்குவிக்கப்பட்டது. மாலையில் எல்லா வீடுகளிலும் குடும்ப செபமாலை சொல்வது அழகாக இருக்கும்.
7.08.1982-28.07.1991 அருட்பணி பிலோமின்ராஜ் பங்குதந்தையாக சிறப்பாக பணி செய்தார். மலைக்கோவில் அழகாக கட்டப்பட்டது. மற்றும் மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகள் கட்டப்பட்டன. ஓவ்வொரு சனிக்கிழமைகளிலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்தார்கள். மக்கள் நம்பிக்கையுடன் பிற நாட்களிலும் வந்து செபித்து நலன்களை பெற்றார்கள். இன்றும் பெற்று வருகிறார்கள்.
15.12.1990 தற்போது உள்ள அழகிய ஆலயம் திறக்கப்ட்டது. அருட்தந்தை பிலோமின்ராஜ் அவர்களின் பெரு முயற்சியினாலும் மக்களின் ஒத்துழைப்பினாலும் கட்;டப்பட்டது. இதற்கு இந்து சகோதரர்களும் பெரிதும் உதவி செய்திருக்கின்றனர்.
1986 1991 மலையடிவாரத்தில் புதிய பள்ளி கட்டிடங்கள் உருவாயின. பாஸ்கா மேடையாக அமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாஸ்கா ஒளி ஒலி காட்சி சிறப்பாக தயாரிக்கப்பட்டு விளம்பரம் செய்து நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்து பார்க்கின்றனர். ஒளி ஒலி காட்சி ஊருக்கே பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்துள்ளது.
ஊருக்கு பேருந்தும் தபால் நிலையமும் வந்தது.
அருட்தந்தை அமிர்தநாதன் (27.07.1991-13.08.1993) ஆலய மேற்கோபுரம் திருத்தி அமைத்தார்,கல்லறைகள் வரிசையாக அமைத்து ஒழுங்கு செய்தார்.
அருட்தந்தை வனத்தையன் (21.07.94-20.07.95) 1995ல் உயர்நிலைப்பள்ளி உருவானது 21.04.1995ல் நாவக்கொல்லை ஆலயம் திறக்கப்பட்டது.
அருட்தந்தை பங்கிராஸ் (21.07.1995-20.08.1997) ஆலயத்திற்கு மின்விசிறிகள் அமைக்கப்பட்டன.
அருட்தந்தை எல்.சூசைநாதன் (20.08.1997-14.06.2004) கல்வி வளர்ச்சிக்காக 9.07.2001ல் மேல்நிலைப்பள்ளியும் இதற்கான கட்டிடங்களும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. அருமையான மூன்று மாடி கட்டிடம் மாணவர்கள் தங்கி படிக்கக் கட்டபட்டது. கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு அதிக அளவில் தந்தை அவர்களால் செய்யப்பட்டுள்ளது. பங்கில் அதிக அளவு மாணவர்கள் படிக்க பங்குதந்தையின் முயற்சி பாராட்டதக்கது. மக்கள் பெருக்கத்தினால் சூசைநகர் உருவாகி அங்கு சலேத் மாதா ஆலயமும் கட்டப்பட்டது.
அருட்தந்தை ஐ. ஆரோக்கிய சாமி 15.06.2004ல் பொறுப்பெடுத்து 21.05.2005 வரை பங்குதந்தையாக செயல்பட்டார். இவர் காலத்தில் புனித ஆரோக்கிய அன்னை கெபி கட்டி திறக்கப்பட்டு மாதத்தின் இரண்டாவது சனிகிழமை திருப்பலி கொண்டாடபடுகிறது.
அருட்தந்தை ரா. மரியதாசன் (22.05.2005-25.05.2008)பங்குதந்தையாக பணியாற்றினார். மக்களின் நீண்ட நாள் விருப்பமான கார்மேல் அன்னை திருத்தலம் இளையாங்கண்ணியில் மக்கள் குடியேறி 100 ஆண்டுகள் நிறைவாக ஊர்காரியகாரர்கள் மற்றும் இறைமக்களின் தாராள நிதி உதவியோடு ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு பேரருட்திரு தந்தை மா. ஜோ. லூர்துசாமி அவர்களால் 15.07.2005 அன்று அர்ச்சிக்கபட்டது. ஆரம்பபள்ளிக்கென்று போதிய கட்டிட வசதி இல்லாததால் நான்கு வகுப்பறைகள் கொண்ட மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மண்ணின் மைந்தர்கள்
பேரருட்தந்தை. A.C.சவரிமுத்து Vellore diocese
பேரருட்தந்தை. R.அந்தோனி Tespour diocese
அருட்தந்தை. A.அபிரகாம் அந்தோனி Simla diocese
அருட்தந்தை. Y.ஆரோக்கியசாமி Vellore diocese
அருட்தந்தை. சூசை Popal diocese
அருட்தந்தை. D.ஸ்டனிஸ்லாஸ் Vellore diocese
அருட்தந்தை. L.C.பிலவேந்திரன் Ooty diocese
அருட்தந்தை. இரட்சகன் Vellore diocese
அருட்தந்தை. A.மோட்சநாதன் Vellore diocese
அருட்தந்தை. S.ஜோசப் ராஜா
அருட்தந்தை. மத்தேயு Vellore diocese
அருட்தந்தை. S.ஆரோக்கிய சாமி ocd
அருட்தந்தை. D.பிரான்சிஸ் somescan
அருட்தந்தை. G.ஆன்ரு sdm
அருட்தந்தை. A.ஜோசப் Vellore diocese
அருட்தந்தை. பிரான்சிஸ் msfs
அருட்தந்தை. இருதய சாமி Vellore diocese
அருட்தந்தை. பால்ராஜ் Capuchin
அருட்தந்தை. M.பீட்டர்ராஜ் Vellore diocese
அருட்தந்தை. G. பீட்டர் ராஜ் Vellore diocese
அருட்தந்தை. D. பெலிக்ஸ் Varanasi diocese
அருட்தந்தை. அந்தோனி சாமி Varanasi diocese
அருட்தந்தை. G.ஜோசப் ocd
அருட்தந்தை. சின்னப்பன் Pareli diocese
அருட்தந்தை. ஆரோக்கிய ராஜ் Vellore diocese
அருட்தந்தை. A.ஜான்பிரிட்டோ Varanasi diocese
அருட்தந்தை. M.ஏசுதாஸ் Vellore diocese
அருட்தந்தை. பிலிப் தயானந் cmf
அருட்தந்தை. ஆரோக்கிய சாமி osm
திருவிழாக்கள்
1. பாஸ்கா ஒளி ஒலி காட்சி உயிர்த்த ஆண்டவரின் தேர் திருவிழா
2. ஜூலை 16 கார்மேல் அன்னை பெருவிழா பங்கின் திருவிழா
3. மே மாதம் 3-வது சனிக்கிழமை சலேத் அன்னையின் தேர்திருவிழா
4. செப்டம்பர் 8 ஆரோக்கிய அன்னை திருவிழா நாவக்கொல்லை கிளைப்பங்கு.
5. மே 24 சகாய அன்னை திருவிழா சகாய அன்னை கெபி.
பங்குத்தந்தையர்கள்
அருட்தந்தை. ஜே.சி. ராயன் 31.10.1953
அருட்தந்தை. கரோப் 1963
அருட்தந்தை. வல்லப்பநாதர்.
அருட்தந்தை. குரியன் 16.03.1970
அருட்தந்தை. பிலோமின் ராஜ் 8.07.1982
அருட்தந்தை. அமிர்தநாதன் 29.07.1991
அருட்தந்தை. பவுல் ராஜ ரீகம் 14.08.1993
அருட்தந்தை. வனத்தையன் 20.06.1994
அருட்தந்தை. பங்கிராஸ் 21.07.1995
அருட்தந்தை. சூசைநாதன் 21.08.1997
அருட்தந்தை. ஆரோக்கிய சாமி 15.06.2004
அருட்தந்தை. மரியதாசன் 22.05.2005
அருட்தந்தை. ஜான் போஸ்கோ 26.05.2008