8-ம் வகுப்பு வரை (ஒவ்வொன்றிற்கும் அதிகாரம் வசனம் குறிப்பிடவும்) லூக்கா நற்செய்தி 1. எத்தனை ஆண்டுகள் அந்த பெண் இரத்தப்போக்கினால் வருந்தினார்? 2. இயேசுவைக் கண்டதும் யார் மகிழ்ச்சி அடைந்தது? 3. கல்லின்மேல் கல் இராதபடி இடிபடும். எது? 4. இயேசுவைத் தொட யாரைக் கொண்டு வந்தார்கள்? 5. 'கூலியாட்களுள் ஒருவனாக என்னை வைத்து கொள்ளும் என்பேன்' என்று கூறியது யார்? 6. பலிசெலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைக் கொன்றது யார்? 7. வானத்திலிருந்து எது மின்னலைப் போல் விழுந்தது? 8. பாவியான பெண் பரிசேயரின் வீட்டிற்கு என்ன கொண்டுவந்தார்? 9. 'நான் பாவி; நீர் என்னைவிட்டு போய்விடும்' என்று கூறியது யார்? 10. உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் என்று கூறியது யார்? 11. வரிதண்டுபவர் எவ்வாறு செபித்தார்? 12. யாருக்குக் கப்பம் கட்டக்கூடாது? 13. கைம்பெண் எத்தனை காசுகளை போட்டார்? 14. இறைவனிடம் வேண்ட கோவிலுக்கு சென்றவர்கள் யார்? 15. 'நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன்' என்று கூறியது யார்? 16. 'ஆண்டவரே நீர் சொல்லும்; இந்த உவமை எங்களுக்கா? எல்லாருக்குமா?' என்று கேட்டது யார்? 17. இயேசுவால் அனுப்பப்பட்ட சீடர்களை ஏற்றுக்கொள்ளாத ஊர் பெறும் தண்டனை எந்நகர் பெறும் தண்டனையைவிட கடினமாக இருக்கும்? 18. யாருடைய நீதி நெறியை ஏற்று யாரிடம் திருமுழுக்கு பெற வேண்டும்?; 19. இயேசு யாரென பேய்கள் அறிந்திருந்தன? 20. வானதூதர் சொன்னவாறு குழந்தைக்கு என்ன பெயரிட்டார்கள்? 21. எம்மாவு எருசலேமிலிருந்து எத்தனை கி.மீ தொலைவில் உள்ளது? 22. சக்கேயு இயேசுவை எங்கு சந்தித்தார்? 23. ஒற்றர்கள் இயேசுவிடம் கூறியது யாது? 24. இறையாட்சி எங்கு செயல்படுகிறது? 25. இளையமகன் எல்லாவற்றையும் திரட்டிகொண்டு எங்கு சென்றான்? 26. 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்'; என்று கூறியது யார்? 27. இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே அவர் எங்கு சென்றார்? 28. இயேசு யாரிடம் 'உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்' என்று கூறினார்? 29. நாசரேத்தில் புறக்கணிக்கப்பட்ட பின் இயேசு எங்கே சென்றார்? 30. 'நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது' என்று கூறியது யார்? 31. இயேசு உயிர்த்தெழுந்த அன்று சீடர்கள் இருவர் சென்ற ஊரின் பெயர் யாது? 32. யாருக்கு தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்? 33. இயேசுவை ஒழித்துவிட வழி தேடியவர்கள் யாவர்? 34. 'இறையாட்சி எப்போது வரும்' என்று இயேசுவிடம் கேட்டது யார்? 35. யாரைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்? 36. நீங்கள் பேச வேண்டியதை யார் உங்களுக்கு கற்றுத் தருவார்? 37. இயேசு மலைக்கு கூட்டி சென்ற மூன்று சீடர்கள் யாவர்? 38. கப்பர்நாகுமில் யார் சாகும் தருவாயில் இருந்தார்? 39. இறைவாக்கினர் எலிசேயுவின் காலத்தில் யாருக்கு தொழுநோய் நீங்கியது? 40. மூன்று மாதம் எலிசபெத்தோடு யார் தங்கியிருந்தார்? 41. விண்ணேற்பிற்கு முன் சீடர்களுக்கு எதை இயேசு அளிப்பதாக சொன்னார்? 42. எது 'உங்களுக்காக சிந்தப்படும் எனது இரத்தம்?' 43. 'போதகரே! உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்'; என்று கூறியது யார்? 44. பாவம் செய்தவரை மன்னிக்க வேண்டும் என்று சொன்ன ஆண்டவரிடம் சீடர்கள் எதைக் கேட்டார்கள்? 45. எந்த நோயுள்ள ஒருவர் இயேசு முன் அமர்ந்திருந்தார்? 46. யாரின் புளிப்புமாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்? 47. தனித்திருப்பதற்காக திருத்தூதர்களைக் கூட்டிக்கொண்டு இயேசு எங்குசென்றார்? 48. ஒவ்வொரு மரமும் எதனால் அறியப்படும்? 49. யாருடைய சுருளேடு இயேசுவிடம் கொடுக்கப்பட்டது? 50. தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டது யார்? 51. இயேசு எங்கு சென்று ஆசி வழங்கினார்? 52. இயேசு யாரோடு பந்தியில் அமர்ந்தார்? 53. உயர் குடிமகன் ஒருவன் ஆட்சியுரிமை பெற்றுவர எங்கு புறப்பட்டார்? 54. எது வருவதை தடுக்க முடியாது? 55. எதை என்னைவிட மேலாகக் கருதினால் என் சீடராயிருக்க முடியாது? 56. நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்தது யார்? 57. பயணத்திற்கு எதை எடுத்துக் கொண்டு போக கூடாது? 58. யார் யாரை விட மேலானவர் அல்ல? 59. போவாசின் தந்தை யார்? 60. முதிர்ந்த வயதில் யார் கருத்தரித்திருந்தார்? 61. எத்தனை மணி நேரம் இருள் சூழ்ந்திருந்தது? 62. பாஸ்காவின் போது எது பலியிடப்பட வேண்டும்? 63. இழந்து போனதைத் தேடி மீட்க யார் வந்திருக்கிறார்? 64. இலாசர் என்னும் பெயர் கொண்ட யார் இருந்தார்? 65. இயேசு யாரைப் பார்த்து 'ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா இல்லையா' எனக் கேட்டார்? 66. ஒருவரை விட்டு வெளியேறிய தீய ஆவி திரும்பி வரும்போது என்ன செய்தது? 67. தொழுகைக்கூட தலைவர் பெயர் யாது? 68. பன்னிருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு என்ன செய்தார்? 69. 'விரியன் பாம்பு குட்டிகளே' என்று கூறியது யார்? 70. யோசேப்பு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்? 71. சிலுவையின் மேல் என்ன எழுதியிருந்தது? 72. பாஸ்கா விழாவிற்கு முன் யாருக்குள் சாத்தான் புகுந்தான்? 73. சக்கேயு என்னும் பெயருடைய யார் இருந்தார்? 74. எந்த வீட்டு வேலையாளும் யாருக்கு பணிவிடை செய்ய முடியாது? 75. எத்தகைய வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்? 76. ஒருவன் எதன்பொருட்டு எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார்? 77. சோதனைக் காலத்தில் எதை விட்டுவிடுவார்கள்? 78. ஓய்வு நாள் யாருக்குக் கட்டுப்பட்டது? 79. மக்கள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்? 80. கடவுளின் திருமுன் நிற்பவன் யார்? 81. யார் வயல் வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார்? 82. 'தலை நிமிர்ந்து நில்லுங்கள்;' எது நெருங்கி வருகிறது? 83. கடவுளுக்கு ஏற்புடையவராக யார் ஆகிறார்? 84. யார் முன்மதியோடு செயல்பட்டதால் தலைவர் பாராட்டினார்? 85. இறையாட்சி எதற்கு ஒப்பாய் இருக்கிறது? 86. நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டது யார்? 87. ஏழு பேய்கள் நீங்கப் பெற்றவர் யார்? 88. யாரைக் கட்டிலோடு தூக்கி வந்தனர்? 89. யூதேயாவின் ஆளுநராக இருந்தது யார்? 90. செக்கரியா ஆற்றிய பணி யாது? 91. யார் கேட்டப்படி பிலாத்து தீர்ப்பளித்தான்? 92. மன உறுதியோடு இருந்து எதைக் காத்துக் கொள்ள வேண்டும்? 93. யாரைப் பற்றி இறைவாக்கினர் வாயிலாக எழுதப்பட்டவை யாவும் நிறைவேறும்? 94. செல்வர் ஒருவருக்கு யார் ஒருவர் இருந்தார்? 95. ஓய்வுநாளில் இயேசு எங்கு கற்பித்துக் கொண்டிருந்தார்? 96. உங்கள் பெயர் எங்கு எழுதப்பட்டுள்ளது? 97. யார் விதைக்கச் சென்றார்? 98. நோய் நீங்கினால் யார் கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்த வேண்டும்? 99. சிறுவன் இயேசு எங்கு தங்கியிருந்தார்? 100. செக்கரியாவின் மனைவி பெயர் யாது?
9-12 வகுப்புகளுக்கு (ஒவ்வொன்றிற்கும் அதிகாரம் வசனம் குறிப்பிடவும்) புனித மத்தேயு 1. கிறிஸ்து இம்மானுவேல் என்பதை முன்னறிவித்த இறைவாக்கினர் யார்? 2. தந்தையையோ தாயையோ சபிப்போரை என்ன செய்ய கூறுகிறார்? 3. 'நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ இல்லை பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்' என்று இயேசு சபித்த ஊர் எது? 4. 'அய்யா நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும.; என் பையன் நலமடைவான்' என்று இயேசுவிடம் யார் கூறினார்? 5. உங்கள் செல்வத்தை எங்கு சேமித்து வைக்க வேண்டுமென்று கூறுகிறார்? 6. விண்ணுலகின் மேல் ஆணையிடக்கூடாது. ஏன்? 7. இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்கு முன்பாக எத்தனை நாள் நோன்பு இருந்தார்? 8. திருமுழுக்கு யோவான் எதை ஆடையாக அணிந்திருந்தார்? 9. குழந்தை யேசுவையும் அவர் தாய் மரியாவையும் யோசேப்பு எங்கே கூட்டிச்சென்றார்? 10. தலைசிறந்த முதன்மையான கட்டளை எது? 11. இம்மானுவேல் என்பதன் பொருள் என்ன? 12. இயேசுவைப் பற்றி பேதுரு கூறுவது என்ன? 13. ஓய்வுநாள் யாருக்குக் கட்டுப்பட்டது என்று இயேசு கூறுகிறார்? 14. இயேசு மத்தேயுவை அழைத்தபோது அவர் செய்துவந்த தொழில் என்ன? 15. நாம் யார் யாருக்கு பணிவிடை செய்ய முடியாது? 16. மண்ணுலகின் மேல் ஆணையிடக் கூடாது ஏன்? 17. இயேசு அழைத்த முதல் இரு சீடர் யார்? 18. திருமுழுக்கு யோவான் எதை உணவாக உண்டார்? 19. எகிப்தில் யோசேப்பும் மரியாவும் குழந்தையும் எதுவரை தங்கி இருந்தார்கள்? 20. எந்த அரசன் காலத்தில் இயேசு பிறந்தார்? 21. கொல்கொதா என்பதன் பொருள் என்ன? 22. இயேசு தோற்றம்; மாறும்போது அவரோடு இருந்தவர்கள் யாவர்? 23. இயேசுவின் பெரும்பாலான உவமைகள் எந்த அதிகாரத்தில் காணப்படுகின்றன? 24. 'உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன'என்று கேட்டவர் யார்? 25. தூய்மையானது எதையும் எதற்கு கொடுக்க வேண்டாம்? 26. நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது யாரைப்போல் இருக்க வேண்டாம்? 27. பேதுரு அந்திரேயாவிடம் இயேசு கூறியது என்ன? 28. திருமுழுக்கு யோவான் யாரைப் பார்த்து 'விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்' என்று கேட்டார்? 29. ஏரோது இறந்ததும் யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எந்த நாட்டிற்குச்சென்றார்? 30. 'ஏலி ஏலி லெமா சபக்தானி' என்பதன் பொருள் என்ன? 31. இயேசு எங்கு பிறந்தார்? 32. கோயிலைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளது என்ன? 33. திருமுழுக்கு யோவானை ஏரோது சிறையில் அடைத்தது ஏன்? 34. இயேசுவின் ஆடையைத் தொட்ட பெண் எந்த நோயிலிருந்து குணமடைந்தார்? 35. விண்ணுலகில் உள்ள தந்தை தம்மிடம் கேட்போருக்கு மிகுதியாக எதை அளிப்பார்? 36. உடலுக்கு விளக்கு என இயேசு எதைக் குறிப்பிடுகிறார்? 37. செபதேயுவின் புதல்வர்கள் யாவர்? 38. இயேசு யோவானிடம் திருமுழுக்கு பெற எங்கு வந்தார்? 39. யூதேயாவில் ஏரோதுக்குப் பிறகு அரசாண்டவர் யார்? 40. யேசுவின் சிலுவையில் எழுதப்பட்டிருந்தது என்ன? 41. மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் தங்கியிருந்தவர் யார்? 42. மீனின் வாயிலிருந்து கிடைத்த நாணயத்தின் பெயர்? 43. எத்தனை அப்பங்களையும் எத்தனை மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்? 44. இயேசுவுக்கு முன்னோடியாக வரவேண்டிய எலியா யார்? 45. பொன் விதியைக் கூறு. 46. நீங்கள் நோன்பு இருக்கும் போது எவ்வாறு இருக்க வேண்டாம் என கூறுகிறார்? 47. இயேசு யாக்கோபையும் யோவானையும் அழைக்கும்போது அவர்கள் எங்கே இருந்தார்கள்? 48. இயேசு திருமுழுக்கு பெறும்பொழுது பரிசுத்த ஆவி எவ்வடிவில் அவர்மேல் இறங்கினார்? 49. இயேசுவுக்கு நசரேயன் என்ற பெயர் சூட்டப்பட்டது எப்படி? 50. மரியாவின் கணவர் யோசேப்பை புனித மத்தேயு எவ்வாறு வர்ணிக்கிறார்? 51. நூற்றுவர் தலைவர் இயேசுவைப் பற்றி கூறியது என்ன? 52. மத்தேயு நற்செய்தியில் இயேசு தம் சாவை எத்தனை முறை முன்னறிவித்தார்? 53. எந்த காவல் வேளையில் இயேசு கடல் மீது நடந்து வந்தார்? 54. ஞானிகள் குழந்தை யேசுவை எவ்வாறு வணங்கினார்கள்? 55. 'அய்யா நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று யார் யாரிடம் கூறினார்? 56. நீங்கள் நோன்பு இருப்பது யாருக்கு மட்டும் தெரியும்? 57. தம் சகோதரரையோ சகோதரியையோ முட்டாளே என்பவர் எந்த தீர்ப்புக்கு ஆளாவர்? 58. இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காக பாலைநிலத்திற்கு யாரால் அழைத்துச் செல்லப்பட்டார்? 59. திருமுழுக்கு யோவான் யூதாவின் பாலைநிலத்துக்கு வந்து பறைசாற்றியவை என்ன? 60. ஞானிகள் இயேசுவுக்கு காணிக்கையாகக் கொடுத்தது என்ன? 61. ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரை உள்ள தலைமுறைகள் எத்தனை? 62. மத்தேயு நற்செய்தியை எப்போது எழுதினார்? 63. மத்தேயு இந்நூலை யாருக்காக எழுதினார்? 64. மத்தேயு நற்செய்தி எம்மொழியில் எழுதப்பட்டது? 65. பெண் யாருடைய இல்லத்தில் வைத்து இயேசுவின் தலையில் நறுமணத் தைலத்தை ஊற்றினாhள்? 66. பேதுருவும் இயேசுவோடு இருந்தவர்களுள் ஒருவர் என்று கூறியது யார்? 67. இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்திய பிறகு அவர் எங்கே சென்றார்? 68. மத்தேயு நற்செய்தியில் உள்ள கடைசி வாக்கியம் என்ன? 69. மகதலா மரியாவும் வேரொரு மரியாவும் கல்லறைத் தோட்டத்தில் கண்டது யாரை? 70. பேய் பிடித்திருந்த சிறுவனை இயேசுவின் சீடர்களால் குணமாக்க முடியாதது ஏன்? மாற்கு நற்செய்தி 71. சொந்த ஊர் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது இயேசு என்ன கூறினார்? 72. இயேசு சீடர்களுக்கு இறைவார்த்தையை எவ்வாறு எடுத்துரைத்தார்?; 73. தொழுநோயாளர் முழந்தாள் படியிட்டு வேண்டியது என்ன? 74. இயேசு எதைக்கண்டு வியப்புற்றார்? 75. மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யார்? 76. உயிர்த்தெழுதலை நம்பாத யூதர் யாவர்? 77. இடியின் மக்கள் என்று அழைக்கப்பட்டவர் யாவர்? 78. ஊமை செவிட்டுப் பேயை எவ்வாறு வெளியேற்ற இயலும்? 79. மனிதர்களைத் தீட்டுப் படுத்துவது எது? 80. 'அஞ்சாதீh!; நம்பிக்கையை மட்டும் விடாதீர்' என்று இயேசு யாரிடம் கூறினார்? 81. விதைப்பவர் எதை விதைக்கிறார்? 82. 'இதற்காகவே நான் வந்திருக்கிறேன'; என்று கூறி இயேசு குறிப்பிட்ட பணி யாது? 83. வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றியவர்கள் யாவர்? 84. யார் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்? 85. கல்லறைத் தோட்டத்தில் பெண்கள் யாரைக் கண்டனர்? 86. வரி செலுத்துவதைப் பற்றிய கேள்விக்கு இயேசு அளித்த பதில் என்ன? 87. முடக்கு வாதமுற்றவர் எவ்வாறு வீடு திரும்பினார்? 88. இயேசு தோற்றம் மாறிய போது அவருடைய ஆடைகள் எவ்வாறு ஒளி வீசின? 89. வெளிவேடக்காரர்களுக்கு பொருத்தமாக ஏசாயா உரைத்த இறைவாக்கு யாது? 90. என் மேலுடையைத் தொட்டவர் யார் என்று இயேசு ஏன் கேட்டார்? 91. எக்காலத்திலும் மன்னிப்புப் பெறாமல் போய்விடுபவர் யார்? 92. நோயாளர்கள் பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் எப்பொழுது இயேசுவிடம் கொண்டுவந்தனர்? 93. கடவுளின் நற்செய்தியை பறைசாற்றிக்கொண்டு கலிலேயாவுக்கு வந்தது யார்? 94. இயேசு மலைமேல் ஏறி யாரை தம்மிடம் வரவழைத்தார்? 95. கெத்சமனி தோட்டத்தில் இயேசுவோடு இருந்தவர்கள் யாவர்? 96. விண்ணகத் தந்தை உங்கள் குற்றங்களை மன்னிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 97. 'தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்'; என்று கத்தியவர் யர்? 98. 'நீர் மெசியா' என்று இயேசுவைப் பார்த்து கூறியவர் யார்? 99. இயேசுவின் மேலாடையின் ஓரத்தைத் தொட்டு நலமடைந்தவர் யாவர்? 100. தங்கள் பகுதியை விட்டுச் செல்லுமாறு இயேசுவை வேண்டிக் கொண்டவர் யாவர்? 101. பரிசேயர் யாரோடு சேர்ந்து இயேசுவை ஒழிக்க சூழ்ச்சி செய்தனர்? 102. 'நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'; இவ்வாசகம் யாரைக் குறித்து கூறப்பட்டது? 103. எப்போது இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்? 104. மாற்கு நற்செய்தி யாருக்காக எழுதப்பட்டது? 105. தனது இரண்டாம் வருகையைப் பற்றி இயேசு கூறியது என்ன? 106. இயேசு எவ்வாறு எருசலேமுக்குள் நுழைந்தார்? 107. மானிடமகன் எதற்காக வந்தார்? 108. வானத்திலிருந்து அடையாளம் ஒன்று காட்டும்படி இயேசுவைச் சோதித்தவர் யார்? 109. நீ என்னிடம் எதைக்கேட்டாலும் ஏன் என் அரசில் பாதியைக் கேட்டாலும் தருகிறேன். யார் யாரிடம் கூறியது? 110. பேய்பிடித்தவன் இயேசுவைப் பணிந்து கூறியது என்ன? 111. இவன் கடவுளைப் பழிக்கிறான் எனச் சொன்னது யார்? 112. 'நீர் யார் என எனக்குத் தெரியும்'; என்று இயேசுவைப் பார்த்து சொன்னது யார்? 113. நான் உங்களுக்கு தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன். அவரோ உங்களுக்கு.........திருமுழுக்கு கொடுப்பார். 114. திருத்;தூதர் பேதுருவுக்கு துணையாக திருத்தொண்டில் ஈடுப்பட்டிருந்தவர் யார்? 115. எல்லா கட்டளைகளிலும் முதன்மையான கட்டளை எது? 116. இயேசு எந்த நேரத்தில் கடல் மீது நடந்தார்? 117. யார் யார் இறையாட்சிக்கு உட்பட மாட்டார்? 118. எப்பத்தா என்பதன் பொருள் என்ன? 119. செபதேயுவின் மக்கள் யார்?; 120. இயேசுவால் அனுப்பப்பட்ட திருத்தூதர் புறப்பட்டுச் சென்று என்ன பறைசாற்றினர்? 121. காற்றையும் கடலையும் அடக்கியபின் இயேசு சீடர்களிடம் கூறியது என்ன? 122. 'மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.' யார் யாரிடம் கூறியது? 123. இயேசு தொழுகைக் கூடத்திற்குச் சென்று எப்படி கற்பித்து வந்தார்? 124. 'இதோ! என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன்.' தூதன் யார்?
புனித யோவான் 125. எருசலேம் ஆலயத்தை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆயின? 126. உம் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்ட யூதர்களுக்கு இயேசு அளித்த மறுமொழி என்ன? 127. நாசரேத்தூர் இயேசு யூதர்களின் அரசன் என்னும் வசனம் எந்தெந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது? 128. 'அவரது செல்வாக்கு பெருக வேண்டும்;;;;;இ; எனது செல்வாக்கு குறைய வேண்டும்.' இது யாருடைய கூற்று? 129. இயேசு அப்பம் பலுக செய்ததை கண்ட மக்கள் கூறியது என்ன? 130. 'நல்ல ஆயன் நானே' அதிகாரத்தையும் வசனத்தையும் குறிப்பிடுக. 131. 'நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்' எனக் கூறி இயேசு செய்த செயல் யாது? 132. எப்போது உங்கள் மகிழ்ச்சி நிறைவடையும்? 133. இயேசு உயிர்த்தபின் வெறுமையான கல்லறைக்குள்ட முதலில் நுழைந்தவர் யார்? 134. யோவான் தன்னுடைய நற்செய்தியை எவ்வாறு ஆரம்பிக்கிறார்? 135. யோவான் எங்கே திருமுழுக்கு கொடுத்து கொண்டிருந்தார்? 136. இயேசு பெத்தானியாவுக்கு செல்வதாக கூறிய பொழுது தோமா மறுமொழியாக கூறியது என்ன? 137. யோவான் நற்செய்தி எந்த மொழியில் எழுதப்பட்டது? 138. இயேசு தன் உணவாக குறிப்பிட்டது எது? 139. எதற்காக உழைக்க வேண்டும்? 140. மார்த்தாவின் விசுவாச அறிக்கை யாது? 141. இயேசு தந்த புதிய கட்டளை யாது? 142. சேவல் கூவியது எப்போது? 143. விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்தவர் யாவர்? 144. திருமுழுக்கு யோவானைப் பற்றி உரைத்த இறைவாக்கினர் யார்? 145. இயேசு சமாரிய பெண் ஒருவரை மனமாற்றிய ஊர் எது? 146. குருத்து ஞாயிறு அன்று இயேசு எவ்வாறு எருசலேமுக்குள் நுழைந்தார்? 147. ஒளியைக் குறித்து சான்று பகர்ந்தவர் யார்? 148. சமாரியர் இயேசுவைப் பற்றி கூறிய சான்று யாது? 149. எவ்வாறு தீர்ப்பளிக்க வேண்டும்? 150. தலைமைக் குருக்கள் இலாசரைக் கொல்ல திட்டமிட்டடது ஏன்? 151. தந்தை மகன் வழியாக எவ்வாறு மாட்சி பெறுவார் ? 152. 'நீ அரசன் தானோ' என்ற கேள்விக்கு இயேசு கூறியது யாது? 153. வழிபாட்டுக்கு வந்த கிரேக்கர்களைப் பற்றி இயேசுவிடம் தெரிவித்தவர்கள் யாவர்? 154. யோவான் இயேசுவைப் பற்றி கூறியது என்ன? 155. சிக்கார் என்னும் நகரில் இயேசு எத்தனை நாட்கள் தங்கியிருந்தார்? 156. இயேசுவை அன்பு செய்யும் வழி என்ன? 157. கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமை யாருடையது? 158. இயேசு செய்த இரண்டாவது அரும்அடையாளம் எது? 159. கலிலேய கடலின் மற்றொரு பெயர் என்ன? 160. இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோருக்குக் கிடைப்பது என்ன? 161. அனைத்தையும் கற்றுத்தருவது யார்? 162. 'கபதா' என்றால் என்ன? 163. விவிலியத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் உள்ளன? 164. கேபா என்றால் என்ன? 165. இயேசு மக்களுக்கு கொடுப்பதாக கூறிய உணவு யாது? 166. இயேசுவை கண்ணத்தில் அறைந்தது யார்? 167. மானிடமகன் எவ்வாறு உயர்த்தபடவேண்டும்? 168. ஐந்து மண்டபங்கள் கொண்ட குளத்தருகில் படுத்திருந்த நோயாளி எத்தனை ஆண்டுகளாக நோயுற்றிருந்தார்? 169. எது உங்களுக்கு விடுதலை அளிக்கும்? 170. இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்? 171. நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். எப்போது? 172. இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தியவர் யார்? 173. புதிய ஏற்பாட்டில் மொத்தம் எத்தனை நூல்கள் உள்ளன? 174. பிலிப்பு இயேசுவிடம் யாரை அழைத்து வந்தார்? 175. யூதாஸைப்பற்றி இயேசு கூறியது என்ன? 176. இயேசு சிலுவையிலிருந்து கூறிய கடைசி வார்த்தை என்ன? 177. ஒளியை வெறுப்போர் யார்? 178. யூதர்கள் இயேசுவைக் கொல்ல மிகுந்த முயற்சி செய்தது ஏன்? 179. சிலோவாம் என்பதன் பொருள் என்ன? 180. 'இக்குரல் என் பொருட்டல்ல. உங்கள் பொருட்டே ஒலித்தது.' அக்குரல் சொன்னது என்ன? 181. எசாயா மெசியாவின் மாட்சியைக் கண்டாரா? 182. இயேசுவின் சடலத்தை எடுத்துச்சென்றவர் யார்? 183. அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள் எப்போது? 184. புனித லூக்கா எந்த திருத்தூதரோடு சேர்ந்து நற்செய்திப் பணியாற்றினார்? 185. நான் மெசியா அல்ல என்று கூறியவர் யார்? 186. யோவான் நற்செய்தி எழுதப்பட்ட காலம் எது? 187. லூக்கா நற்செய்தியின் முதன்மை செய்தி யாது? 188. கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தாh.; அவர் யார்?
புனித லூக்கா 189. 'நீ யூதரின் அரசனா?' என்று இயேசுவை கேட்டது யார்? 190. தங்களை நேர்மையாளராக கருதி மற்றவர்களை இகழ்ந்து ஓதுக்குபவர்களுக்கு இயேசு கூறிய உவமை யாது? 191. இவர்கள் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே என்று பரிசேயர் முணுமுணுத்த போது இயேசு கூறிய உவமைகள் யாவை? 192.'ஆண்டவரே நீர் சொல்லும் உவமை எங்களுக்கா இல்லை எல்லாருக்குமா'என்று கேட்டவர் யார்? 193. மக்கள் இயேசுவைக் கண்டு சோதிக்கும் நோக்குடன் கேட்டது என்ன? 194. இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புக் கூர்ந்தார் என்று இயேசு யாரைப் பற்றி கூறினார்? 195. இயேசுவின் சீடர்கள் வயல்வழியே சென்றபோது என்ன செய்தனர்? 196. தாவீதின் தந்தை யார்? 197. செக்கரியாவின் வாய் எப்பொழுது திறந்தது? 198. 'எங்களோடு தங்கும'; என்று இயேசுவைக் கட்டாயப் படுத்தியவர்கள் யாவர்? 199. யாரைக் கோதுமையைப் போல புடைக்க சாத்தான் அனுமதி; கேட்டிருக்கிறான்? 200. மனந்தளராது எப்போதும் இறைவனிடம் மன்றாடவேண்டும் என்பதற்கு இயேசுகூறிய உவமைஎது? 201. கடவுள் பார்வையில் அருவருப்பானது எது? 202. யாரைக்குறித்து விண்ணுலகில் மகிழ்ச்சி உண்டாகும் என இயேசு கூறினார்? 203. எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றது எப்போது? 204. கடவுளின் நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றவர்கள் யாவர்? 205. 'எழுந்து நடுவே நில்லும்' என்று இயேசு எந்த நோயாளியைப் பார்த்து கூறினார்? 206. யோசேப்பின் தந்தை யார்? 207. 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை.' யார் யாரிடம் கூறியது? 208. கல்லறைக்குச் சென்ற பெண்களிடம் வானதூதர் கூறியது என்ன? 209. மானிடமகனின் வருகை எவ்வாறு இருக்கும்? 210. 'இறையாட்சி எப்போது வரும்' என்று இயேசுவிடம் கேட்டது யார்? 211. ஒலிவ மலைக்கு அருகில் உள்ள ஊர்கள் யாவை? 212. எது நலமாயிருந்தால் உடல் முழுவதும் ஒளி ;பெற்றிருக்கும்? 213. 'நாம் இங்கேயே இருப்பது நல்லது' என்று இயேசுவிடம் கூறியவர் யார்? 214. யாருடைய மகனை இயேசு உயிர்த்தெழச் செய்தார்? 215. 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்று இயேசு எந்த நோயாளியைப் பார்த்து கூறினார்? 216. கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராக வாழ்ந்தவர் யார்? 217. யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவது யார்? 218. பிலாத்திடம் போய் யேசுவின் உடலைக் கேட்டது யார்? 219. கடுந்தண்டனை தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்களாக இயேசு குறிப்பிட்டது யாரை? 220. 'எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்' என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்? 221. நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று இயேசு எதைக் குறிப்பிட்டார்? 222. சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர் யார்? 223. தம்மிடம் கேட்போருக்கு தூய ஆவியை கொடுப்பவர் யார்? 224. எந்த ஊரில் நுற்றுவர் தலைவனின் பணியாளனை இயேசு குணமாக்கினார்? 225. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் இயேசுவைக் கண்டு என்னவென்று வேண்டினார்? 226. பானுவேலின் மகள் யார்? 227. தாய் வயிற்றில் இருக்கும் போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டவர் யார்? 228. இயேசு உயிர் துறந்ததைக் கண்ட நூற்றுவர் தலைவன் என்ன கூறினான்? 229. இயேசு எந்த நகரைப் பார்த்து அழுதார்? 230. எதற்காக யாவரும் நெருக்கியடித்து கொண்டு வருகிறார்கள்? 231. அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி, இல்லையானால் இதை வெட்டி விடலாம் என்ற தொடர் எந்த உவமையில் இடம் பெற்றுள்ளது? 232. கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் இயேசுவின் தாயைப் பற்றி கூறியது என்ன? 233. இயேசு திருத்தூதர்களை மட்டும் கூட்டிக்கொண்டு தனித்திருப்பதற்காக எந்த நகருக்குச்சென்றார்? 234. சமவெளியில் திரண்டிருந்த மக்கள் இயேசுவைத் தொட முயன்றது ஏன்? 235. பலரிடமிருந்து வெளியேறிய பேய்கள் என்னவென்று கத்திக்கொண்டு வெளியேறின? 236. இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்ததவர் யார்? 237. திருக்கோவிலுக்குள் தூபம் காட்டும சீட்டு யார் பெயருக்கு விழுந்தது? 238. இயேசுவின் சிலுவையின்மேல் என்ன எழுதப்பட்டிருந்தது? 239. சக்கேயு யார்? 240. முன்மதியோடு செயல்பட்ட வீட்டுபொறுப்பாளர் உவமை வழியாக இயேசு கூறும் செய்தி யாது? 241. சீலோவாமில் கோபுரம் விழுந்து எத்தனை பேரைக் கொன்றது? 242. பேச்சிழந்தவன் எப்போது பேசத் தொடங்கினான்? 243. கலிலேயாவுக்கு எதிரே இருக்கும் பகுதி எது? 244. இயேசுவை தம்மோடு உண்பதற்கு அழைத்த பரிசேயர் யார்? 245. எலியாவின் காலத்தில் எத்தனை ஆண்டுகள் வானம் பொய்த்தது? 246. குழந்தையேசுவைக் கண்ட இடையர்கள் எவ்வாறு திரும்பிச் சென்றனர்? 247. செக்கரியா எந்த வகுப்பைச் சார்ந்தவர்? 248. லூக்கா நற்செய்தியின் இறுதி இறைவார்த்தை என்ன?; 249.'மீட்புபெறுவோர் எத்தனைப்போ'; என்ற கேள்விக்கு இயேசு அளித்த பதில் என்ன? 250. இயேசுவின் பெண்சீடர்கள் பெயரைக் குறிப்பிடு.
18 வயதிற்கு மேல் (ஒவ்வொன்றிற்கும் அதிகாரம் வசனம் குறிப்பிடவும்) புனித மத்தேயு 01. மத்தேயு நற்செய்தியில் தலைமுறைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்கள் யாவர்? 02. திருமுழுக்கு யோவான் பாலைவனத்திற்கு வந்து போதித்தது என்ன? 03. இயேசு தன் பணிவாழ்வை எங்கு தொடங்கினார்? 04. தீயோரிடமிருந்து வருவது எது ? 05. விண்ணகத் தந்தை எப்போது நம்மை மன்னிக்க மாட்டார்? 06. போலி இறைவாக்கினர்களை எவ்வாறு இனம் கண்டு கொள்ளலாம்? 07. இயேசுவை தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டது யார்? ஏன்? 08. என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று இயேசு கூறியது என்ன? 09. உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம் என்று இயேசு கூறியதென்ன? 10. அத்திமர உவமையிலிருந்து கற்றுக் கொள்ளுமாறு இயேசு சொல்வதென்ன? 11. மரியாவின் கணவர் யோசேப்பு நீதிமான் என்பதை எவ்வாறு அறியலாம்? 12. திருமுழுக்கு யோவானைப் பற்றி எசாயா உரைத்த இறைவாக்கு என்ன? 13. இயேசு அழைத்த முதல் சீடர்கள் யாவர்? 14. யாருக்கு முகம் கோணக் கூடாது? 15. நோன்பு இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்? 16. இதைக் கண்டுபிடிப்பவர் சிலரே. விளக்குக 17. 'மகனே துணிவோடிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.' யார் யாரிடம் கூறியது? 18. மரத்தை அதன் கனியால் அறியலாம.; இதன்மூலம் இயேசு சொல்வதென்ன? 19. விண்ணரசு யாருக்கு உரியதென்று இயேசு கூறுகிறார்? 20. அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்கு தெரியாது. விளக்குக. 21. இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்பதை ஏரோது எவ்வாறு அறிந்து கொண்டான்? 22. திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை முறையை விவரி 23. இயேசு குணமாக்கிய நோயாளிகள் யாவர்? 24. அறச்செயல்களை எவ்வாறு செய்யக்கூடாது? 25. உண்மைச் செல்வத்தைப் பற்றி இயேசு சொல்வதென்ன? 26. வீட்டின் அடித்தளங்களை உவமையாக கொண்டு இயேசு கூறுவது யாது? 27. நோயற்றவர்க்கல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. இடம்சுட்டி பொருள் விளக்கு 28. இறையரசு பற்றி இயேசு கூறிய உவமைகள் யாவை? 29. செபதேயுவின் மனைவி இயேசுவிடம் விடுத்த வேண்டுகோள் என்ன? 30. 'ரபி வாழ்க' என்று கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். யாh,; யாரை, ஏன்? 31. ஏரோது குழந்தையைப் பற்றி அதிகமாக விசாரித்தது ஏன்? 32. திருமுழுக்கு யோவான் மக்கள் மனம் மாறியதை எவ்வாறு வெளிப்படுத்தச் சொன்னார்? 33. மலைப்பொழிவில் 'பேறுபெற்றோர்' எத்தனை? 34. எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும்? 35. உடலுக்கு விளக்கு எது? அது எப்படி இருக்க வேண்டும்? 36. தொழுநோயாளிக்கு சுகம் தந்த பிறகு இயேசு நோயாளியிடம் என்ன சொன்னார்? 37. 'அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள.;' எப்போது? யார்? 38. உள்ளத்திலிருந்து வெளிவந்து மனிதனை தீட்டுப்படுத்துவதாக இயேசு கூறுபவை யாவை? 39. எருசலேமில் இயேசு நுழைவதைப் பற்றி இறைவாக்கினர் உரைத்தது என்ன? 40. இரத்தநிலம் -- குறிப்பு வரைக 41. மத்தேயு நற்செய்தியை எழுதியதன் நோக்கம் என்ன? 42. திருமுழுக்கு யோவான் இயேசுவிற்கு ஏன் திருமுழுக்கு கொடுத்தார்? 43. எப்போது விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்? 44. எவ்வாறு இறைவேண்டல் செய்ய வேண்டும்? 45. தீர்ப்பளித்தல் பற்றிய இயேசுவின் கருத்து என்ன? 46. 'இஸ்ரயேலர் யாரிடமும் இத்தiகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை' என்று இயேசு சொன்னதன் பின்னணி என்ன? 47. 'நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்.' இடம்சுட்டி பொருள் விளக்கு 48. பரிசேயர் சதுசேயரின் புளிப்பு மாவு என்று இயேசு குறிப்பிட்டது எது? 49.'அவர் இறந்தோரின் கடவுள் அல்லஇ மாறாக வாழ்வோரின் கடவுள்.' இடம்சுட்டி பொருள்கூறு. 50. ஆளுநன் ஏன் வியப்புற்றான்? 51. இயேசு நசரேயன் என்று அழைக்கப்படுவதன் பின்னணி என்ன? 52. மனிதர் எதனால் வாழ்வர் என்று மறைநூலில் எழுதியுள்ளது? 53. விபச்சாரம் செய்பவர்கள் யார் யார்?
54. இறைவனிடம் எவ்வாறு வேண்டுதல் செய்ய வேண்டும் என்று இயேசு கற்பித்தார்? 55. இறைவேண்டலில் நாம் கேட்பதை கடவுள் தருவார் என்பதை இயேசு எவ்வாறு நிரூபிக்கிறார்? 56. இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம் என்று இயேசு ஏன் சொன்னார்? 57. சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்.இடம் சுட்டி பொருள் விளக்கு. 58. 'விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்' யார் யாரிடம் கூறியது? அந்த வெளிப்பாடு என்ன? 59. முதன்மையான கட்டளை எது? 60. 'அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.' எங்கே? யார்? யாரை? 61. இயேசு ஏன் நாசரேத்திற்கு வந்தார்? 62. யாரை மட்டுமே வணங்க வேண்டுமென்று மறைநூல் கூறுகின்றது? 63. ஆணையிட வேண்டாம். ஏன்? 64. விண்ணகத் தந்தை நம்மை மன்னிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? 65. பொன் விதியைக் கூறு. 66. 'மானிடமகனுக்கு தலைசாய்க்கவும் இடம் இல்லை' என்று இயேசு சொன்னது ஏன்? 67. திருமுழுக்கு யோவானிடம் அறிவிக்குமாறு இயேசு கூறியது என்ன? 68. 'உங்களால் முடியாதது ஒன்றும் இராது' என நான் உங்களுக்கு சொல்கிறேன். இதன் பின்னணியைக் கூறு. 69. மத்தேயு நற்செய்தியில் 'ஐயோ உங்களுக்கு கேடு' என்று இயேசு எத்தனை முறை கூறியிருக்கிறார்? 70. இயேசுவின் உயிர்ப்பு பற்றிய வதந்தி என்ன? 71. 'இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே.' குறிப்பு வரைக 72. மாற்கு நற்செய்தியில் மட்டுமே வருகின்ற உவமை எது? 73. அனைவரும் வியப்புறும்படி தெக்கப்பொலி நாட்டில் இயேசுவைப் பற்றி அறிவித்தவர் யார்? 74. இயேசுவின் மேலுடையின் ஓரத்தையாவது மக்கள் தொட விரும்பினார்கள.; ஏன்? 75. அப்பம் பலுக செய்த புதுமை இரண்டு முறை குறிப்பிடப்படுகின்ற நற்செய்திகள் யாவை? 76. 'என்னுடைய நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று இயேசுவிடம் வேண்டியவர் யார்? 77.'எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்கள் ஆயிற்றே' என்று சொன்ன பேதுருவுக்கு இயேசு சொன்ன மறுமொழி யாது? 78. தெனாரியம் என்பதன் மதிப்பு என்ன? 79. அரிமத்தியா ஊர் யோசேப்பு பற்றி குறிப்பு வரைக. 80. திருமுழுக்கு யோவானை விட வலிமை மிக்கவர் யார்? எப்படி? 81. ஓய்வுநாள்--மனிதர்கள் பற்றி இயேசுவின் கருத்து என்ன? 82. இலேகியோன் -- குறிப்பு வரைக 83. மக்கள் திருமுழுக்கு யோவானை யார் என்று கருதினர்? 84. கொர்பான் -- குறிப்பு வரைக. 85. மனிதர்கள் மரங்களைப் போன்று தோன்றுகிறார்கள் என்று இயேசுவிடம் சுகம் பெற்ற பார்வையற்றவர் பற்றிய நிகழ்வு எங்கு உள்ளது? 86. இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவரை தடுக்க வேண்டாம் என்று இயேசு ஏன் சொன்னார்? 87. மானிடமகன் எதற்காக வந்தார்? 88. கொதிராந்து -- குறிப்பு வரைக 89. நம்பிக்கை கொண்டோர் என்ன அரும் அடையாளங்களைச் செய்வர்? 90. இயேசுவின் போதனையைக் குறித்து மக்கள் ஏன் வியப்பில் ஆழ்ந்தார்கள்? 91. தம் தாயும் சகோதரர்களும் என்று இயேசு யாரைக் குறிப்பிடுகிறார்? 92. தம் சொந்த ஊருக்கு சென்ற போது இயேசு வியப்புற்றது ஏன்? 93. நான்காம் காவல் வேளை என்பது எப்போது? 94. பரிசேயர் மறைநூல் அறிஞர் இவர்களின் வெளிவேடத்தைப்பற்றி எசாயா உரைத்த இறைவாக்கு என்ன? 95. இயேசு தோற்றம் மாறிய நிகழ்வு எப்போது நடைபெற்றதாக புனித மாற்கு தன் நற்செய்தியில் குறிப்பிடுகிறார்? 96. கட்டளைகள் அனைத்தையும் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்தேன் என்று கூறியது யார்? அவரிடம் குறைவாய் இருந்தது என்ன? 97. ஓசன்னா -- குறிப்பு வரைக. 98. நடுங்கவைக்கும் தீட்டு -- குறிப்பு வரைக 99. சீடருடைய வார்த்தையை இயேசு எவ்வாறு உறுதிப்படுத்தினார்? 100. மாற்கு நற்செய்தியில் இயேசுவை கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்று முதலில் அறிக்கையிட்டவர் யார்? புனித லூக்கா 101. செக்கரியா குடும்பத்தைப் பற்றி குறிப்பு வரைக. 102. இயேசுவினுடைய பிறப்பு எப்போது முன்னறிவிக்கப்பட்டது? 103. சிமியோன் யார்?
104. இயேசு லூக்கா நற்செய்தியில் சொன்ன முதல் வசனம் என்ன? 105. மத்தேயு நற்செய்தியிலுள்ள மலைப்பொழிவிலும் லூக்காவிலுள்ள சமவெளிப் பொழிவிலும் பேறுகள் பற்றிய பகுதியில் உள்ள வேறுபாடு என்ன?; 106. சமாரியர் ஏன் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? 107. உடல் ஊனமுற்ற பெண் இயேசு குணம் தருவதற்கு முன்பாக எத்தனை ஆண்டுகள் வேதனைப் பட்டார்? 108. 'இறந்த ஒருவர் உயர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்.' விளக்குக. 109. ஏரோதுவும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர். என்று? 110. புனித லூக்காவைப் பற்றி தாங்கள் அறிந்தது என்ன? 111. இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் மத்தேயுவும் லூக்காவும் எவ்வாறு வேறுபடுகின்றனர்? 112. இயேசுவின் பிறப்பின் போதான அரசியல் சூழலைக் கூறு. 113. அன்னாவைப் பற்றி உனக்கு தெரிந்தது என்ன? 114. சீமோனும் யோவானும் எவ்வகையில் உறவினர்? 115. 'உங்களை ஒரு கன்னத்தில் அறைபவர்களுக்கு...'என்று கூறும் இயேசுவின் போதனையில் லூக்காவும் மத்தேயுவும் எவ்வாறு வேறுபடுகின்றனர்? 116. 'சரியாய்ச் சொன்னீர். அப்படியே செய்யும் வாழ்வீர்'; இடம் சுட்டி பொருள் விளக்கு. 117. 'அதற்கு பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.' எதற்கு? யாரால்? ஏன்? 118. 'அன்னியராகிய உம்மைத்தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே'. குறிப்பு எழுதுக 119. இயேசு மரித்தபோது நூற்றுவர் தலைவர் சொன்னது என்ன? 120. லூக்கா நற்செய்தியின் நோக்கம் என்ன? 121. கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற கபிரியேல் தூதர் அதற்கு ஆதாரமாக சொன்னது என்ன? 122. லூக்கா இந்நற்செய்தியை யாருக்காக எழுதினார்? ஏன்? 123. இயேசுவின் வளர்ச்சியைப்பற்றி லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு இடங்கள் யாவை? 124. 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்'இடம் சுட்டி பொருள் விளக்கு. 125. விண்ணகத் தந்தை போல் இருங்கள் என்று கூறுகின்ற இயேசுவின் அறிவுரையில் மத்தேயுவும் லூக்காவும் எவ்வாறு வேறுபடுகின்றனர்? 126. 'அது அவரிடமிருந்து எடுக்கப்படாது' எது? யாரிடமிருந்து? ஏன்? 127. 'தம்மைத் தாமே உயர்த்துபவர் யாவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்' இவ்வாக்கியத்துக்கு காரணமான நிகழ்வு எது? 128. ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ என்று இயேசு ஏன் சொன்னார்? 129. எம்மாவு என்னும் ஊர் எருசலேமிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? 130. லூக்கா நற்செய்தி எழுதப்பட்டது எப்போது? எங்கு? 131. செக்கரியாவிடம் வானதூதர் எவ்வாறு தன்னை அறிமுகம் செய்கின்றார்? 132. இடையர்களுக்கு வானதூதர்கள் குழந்தையைக் குறித்து கொடுத்த அடையாளம் என்ன? 133. திருமுழுக்கு யோவான் பணியைத் தொடங்கிய போது இருந்த அரசியல் மற்றும் மத சூழல் என்ன? 134. 'ஆண்டவரே நான் பாவி. என்னைவிட்டுப் போய்விடும்' இடம் சுட்டி பொருள் விளக்கு. 135. லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் இறந்தோரை உயிர்ப்பிக்கின்ற புதுமை எது? 136. 'போதகரே இவற்றைச் சொல்லி எங்களை இழிவுப் படுத்துகிறீர்'; சொன்னது யார்? 137. 'திராக்மா' குறிப்பு வரைக. 138. வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏன்? 139. 'எங்களோடு தங்கும்' யார் யாரிடம் கூறியது? 140. லூக்கா நற்செய்தியின் முதன்மைச் செய்தி என்ன? 141. எலிசபெத்து கருவுற்ற பின்பு தமக்குள் சொல்லிக்கொண்டது என்ன? 142. சிமியோன் குழந்தையைக் குறித்து கூறியது என்ன? 143. மூதாதையர் பட்டியலில் மத்தேயுவும் லூக்காவும் எவ்வாறு வேறுபடுகின்றனர்? 144. 'உயிரைக் காப்பதா அழிப்பதா எது முறை?' யார் யாரிடம் சொன்னது? எப்போது? ஏன்? 145. இயேசுவின் சீடர்களாயிருந்த பெண்கள் யாவர்? 146. 'இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்'; இடம்சுட்டி பொருள் விளக்கு. 147. 'காணாமல் போயிருந்தான். மீண்டும் கிடைத்துள்ளான.;' யார்? யாரைப்பற்றி யாரிடம் கூறியது? 148. 'மினா' குறிப்பு வரைக. 149. 'இவை ஆவிக்கு கிடையாதே' இடம் சுட்டி பொருள் விளக்குக 150. லூக்கா தன்னுடைய நற்செய்தியை எழுதியதற்கான காரணமாகச் சொல்லுவது என்ன? புனித யோவான் 151. கடவுளை வெளிப்படுத்தியவர் யார்? 152. இயேசு தன் உணவாக யோவான் நற்செய்தியில் குறிப்பிடுவது என்ன? 153. கடவுளுக்கேற்ற செயல் என்ன? 154. 'நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது' யார் யாரிடம் சொன்னது? ஏன்? 155. 'லித்ரா' குறிப்பு வரைக. 156. இயேசுவை அன்பு செய்யும் வழி என்ன? 157. தந்தை மகன் வழியாக மாட்சி பெறுவது எவ்வாறு? 158. சேவல் கூவியது எப்போது? 159. இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தியவர் யார்? 160. யோவான் நற்செய்தியின் நோக்கம் என்ன? 161. 'ரபி' என்றால் என்ன? 162. பெத்சதா-- குறிப்பு வரைக 163. பேதுருவின் விசுவாச அறிக்கை ஒத்தமைவு நற்செய்திகளிலிருந்து யோவான் நற்செய்தி எவ்வாறு வேறுபடுகிறது.? 164. ஒருவேளை நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ? கேட்டது யார்? யாரிடம்? 165. 'ஓசன்னா' பொருள் விளக்கம் தருக. 166. இயேசுவைக் கன்னத்தில் அறைந்தது யார்? 167. அனைத்தையும் கற்றுத் தருபவர் யார்? 168. பிலாத்து அவரை விடுவிக்க வழி தேடினான். ஏன்? 169. இயேசுவின் சடலத்தை எடுத்துச் சென்றவர் யார்? 170. யோவான் நற்செய்தி எழுதப்பட்ட ஆண்டு எது? 171. 'கேபா' குறிப்பு வரைக 172. 'உம் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை' இடம் சுட்டி பொருள் விளக்கு 173. 'நீங்களும் ஏமாந்து போனீர்களோ' இடம் சுட்டி பொருள் விளக்கு 174. 'நாமும் செல்வோம்இ அவரோடு இறப்போம்.' குறிப்பெழுதுக 175. கிரேக்கர்களுடைய விருப்பத்தை இயேசுவிற்கு தெரிவித்தவர் யாவர்? 176. இயேசு சிலுவையிலிருந்து கூறிய கடைசி வார்த்தை என்ன? 177. 'இதிலிருந்து நீர்; கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்' யார் யாரிடம் கூறியது? 178. 'நீ அரசன்தானோ' என்ற கேள்விக்கு இயேசு கூறிய பதில் யாது? 179. இயேசு உயிர்த்த பின் வெறுமையான கல்லறைக்குள் முதலில் நுழைந்தது யார்? 180. யோவான் நற்செய்தி எங்கிருந்து எழுதப்பட்டது? 181. திருமுழுக்கு யோவான் எங்கு திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்? 182. 'உங்களிடம் இறை அன்பு இல்லை' அதிகாரம் வசனம் தருக 183. 'நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்' வசனக் குறிப்பு தருக 184. 'இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒருமனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை.' இடம் சுட்டி பொருள் விளக்கு. 185. இயேசு சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவர்க்கு தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு. அது எது? 186. 'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்.' எந்தெந்த மொழிகளில் எழுதப்பட்டிருந்தது? 187. நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். எப்போது? 188. 'கபதா' என்றால் என்ன? 189. 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தான்.'; யார் யாரிடம் சொன்னது? எப்போது? 190. இயேசுவின் இயல்பை யோவான் எத்தகைய உருவகங்களால் விளக்குகிறார்? 191. கடவுளின் சினம் யார் மேல் வந்து சேரும் ? 192. ஐந்து ஆறு கி.மீ தொலைவை கிரேக்க மொழியில் எவ்வாறு குறிப்பிடுவர்? 193. யார் என்றுமே சாகமாட்டார்? 194. யூதர்கள் ஏன் இலாசரை கொல்ல திட்டமிட்டார்கள்? 195. இயேசு தந்த புதிய கட்டளை எது? 196. 'அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பாh.;' அவர் யார்? 197. எப்போது உங்கள் மகிழ்ச்சி நிறைவடையும்? 198. 'இதை நேரில் கண்டவரே இதற்கு சாட்சி. அவர் சான்று உண்மையானதே.' விளக்குக. 199. 'நான் வரும் வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கென்ன?' இடம்சுட்டி பொருள் விளக்கு. 200. யோவான் நற்செய்திக்கு சாட்சி யார்? திருத்தூதர் பணிகள் 201. பர்னபாவின் இயற்பெயர் என்ன? அவர் யார்? அவர் திருத்தூதர்களிடம் என்ன கொடுத்தார்? 202. எபேசில் பெருங்கலகம் ஏன் ஏற்பட்டது? 203. பவுலும் பர்னபாவும் பிரிந்தது எதனால்? 204. பேதுரு அவரிடம் '..........என்னிடமில்லை.......கொடுக்கிறேன்.' 205. பேதுரு யூதேயாவை விட்டு செசரியா செல்லக் காரணம் என்ன? 206. பொருத்துக. யோப்பா - அனனியா லித்தா - தபித்தா தமஸ்கு - ஐனேயா
207. ......தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள்..........பெற்றார்கள். 208. பஞ்சத்தால் வாடிய யாக்கோபு உணவைத்தேடி எங்கு குடியேறினார்? எத்தனை பேர் சென்றனர்? 209. பேதுருவும் யோவானும் அவரைச் சேர்ந்தவர்களும் கடவுளிடம் மன்றாடியது என்ன? 210. ஆண்டவரும் .....................................................கொண்டேயிருந்தார். 211. திருத்தூதர் பணிகள் நூலின் மையக் கருத்து என்ன? 212. 'இயேசுவை எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் யார்?' இடஞ்சுட்டி பொருள் விளக்கு. 213. பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவிற்கு அனுப்பப்பட்ட சகோதரர்கள் யார்? 214. பவுலும் பர்னபாவும் அந்தியோக்கியாவிலிருந்து வெளியேறக் காரணம் என்ன? 215. கொடிய பஞ்சம் ஏற்படப் போவதை முன்னுரைத்தவர் யார்? எப்போது ஏற்பட்டது? 216. 'எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்.' யார் யாரிடம் கூறியது? 217. .........கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு..........அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். 218. பொய்சாட்சிகள் ஸ்தேவானுக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள் யாவை? 219. பேதுரு குணமாக்கிய கால் ஊனமுற்றவர் வயது என்ன? எங்கு என்ன செய்து கொண்டிருந்தார்? 220. அவர்கள்...............................................நிலைத்திருந்தார்கள். 221. பவுல் தன்னைப் பற்றிக் கூறும் விளக்கம் என்ன? 222. 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' இடஞ்சுட்டிபொருள் விளக்கு. 223. 'நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்த சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?' யார்யாரிடம் கூறியது? 224. மோசேயின் திருச்சட்டத்தால் உங்களை .........முடியாது. ஆனால் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் ........விடுவிக்கப் படுகின்றனர். 225. பர்னபா சவுலைத்தேடி எங்கே சென்றார்? எங்கே அழைத்துச்சென்றார்? 226. ..........ஆகிய பகுதிகளிலெல்லாம்.......வளர்ச்சியுற்று பெருகி வந்தது. 227. இதனால் அந்நகரில் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. எதனால்? 228. 'நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்.' யார் யாரிடம் கூறியது? 229. உங்களுக்கு ..................................................தீர்மானித்துக் கொள்ளுங்கள். 230. அவர் கடவுளின் ..........................................பொழிந்தருளினார். 231. 'உங்களுள் எவர் தலையிலிருந்தும் ஒருமுடி கூட விழாது.' இடஞ்சுட்டி பொருள் விளக்கு 232. அப்பொல்லோ- குறிப்பு எழுதுக. 233. உள்ளங்களை அறியும் கடவுள்..............................ஏற்றுக்கொண்டார். 234. .................காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும் அவரைக் கொல்ல அவர்கள்.................................கேட்டார்கள். 235. கிரேக்கருக்கு முதன்முறை நற்செய்தியை அறிவித்தவர் யார்? 236. அவருடைய.............. விழவே அவர் பார்வை அடைந்தார். பார்வை அடைந்ததும் அவர்......பெற்றாh.; 237. ..................தாங்கள் சென்ற இடமெல்லாம் .......................அறிவித்து வந்தனர். 238. தலைமை சங்கத்தார் திருத்தூதர்களை எத்தனை முறை எச்சரித்தனர்? 239. இவராலேயன்றி........................இல்லை. ஏனென்றால்...............கொடுக்கப்படவில்லை. 240. வாழ்வின் வழியை.................................................மகிழ்ச்சி உண்டு. 241. 'ஆண்டவர் என்னிடம் சொன்னவாறே நடக்கும.;' யார் யாரிடம் கூறியது? 242. 'இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்.' இடஞ்சுட்டி பொருள் விளக்கு 243. 'நாம் பல வேதனைகள் வழியாக இறையாட்சிக்கு உட்பட வேண்டும்.';யார் யாரிடம் கூறியது? 244. கடவுள்.....என்பவரின் மகனான......என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர்......ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். 245. 'கடவுளைத் தடுக்க நான் யார்?' யார் யாரிடம் கூறியது? 246. அவர் பிற இனத்தவருக்கும் ....................................... இருக்கிறாh.; 247. யார் யாரை வீடுவீடாய் நுழைந்து.......................என்ன செய்தார்? 248. 'இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிடவேண்டாம்.' யார் யாரிடம் கூறியது? 249. பேதுருவையும் யோவானையும் யார் யார் எங்கு கைது செய்தனர்? 250. அப்பொழுது .......................... பிழைப்பா.; 251. 'இதுவே கடவுளிடம் எனது வேண்டுதல்.' இடஞ்சுட்டி பொருள் விளக்கு 252. 'அறியாத தெய்வத்துக்கு' பலிபீடம் கட்டியிருந்தவர்கள். இடஞ்சுட்டி பொருள் விளக்கு. 253. பவுலைக் கல்லால் எறிந்தவர்கள் யார்? ஏன்? 254. 'குறிப்பிட்ட காலம் வரை நீ பார்வையற்றவனாய் இருப்பாய்.' யார் யாரிடம் கூறியது?
255. 'தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்.' யார் யாரிடம் கூறியது' 256. அவர் மூன்றுநாள்............................................ குடிக்கவுமில்லை. 257. ........தவிர மற்ற அனைவரும்..........நாட்டுப்புறமெங்கும் சிதறடிக்கப்பட்டு போயினர். 258. 'இவற்றுக்கு........................................... சாட்சிகள்' என்றனர். 259. கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார். எதற்காக? 260. திடீரென்று -------------------------------------------------------------------------------வீடு முழுவதும் ஒலித்தது. 261. 'நாங்கள் உமக்குக் கூறுவதை நீர் செய்யும்.' இடஞ்சுட்டி பொருள் விளக்கு. 262. நடுவர்கள் பவுலிடம் ஏன் மன்னிப்பு கோரினார்கள்?; 263. பர்னபாவும் பவுலும் கூறியபடி கடவுள் நமக்கு செய்துவரும் நன்மைகள் யாவை? 264. 'பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன்.' யார் யாரிடம் கூறியது? 265. 'அவரிடம் நம்பிக்கை கொள்ளும் ........................சான்று பகர்கின்றனர்'; என்றார். 266. 'நீ எழுந்து........................................................ சொல்லப்படும்' என்றார். 267. 'இதோ வானம் திறந்திருப்பதையும் மானிடமகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்.'; யார் யாரிடம் கூறியது? 268. 'நீங்கள் போய் கோவிலில் நின்று ....................... கூறுங்கள்.' யார் யாரிடம் கூறியது? 269. 'அந்த இறைவாக்கினருக்கு.................................அழிக்கப்படுவர்.'; 270. சீட்டு .................... சேர்த்துக் கொள்ளப்பட்டார். 271. 'தூய ஆவியார் தாமே இப்படி கூறுகிறார்.' இடஞ்சுட்டி பொருள் விளக்கு 272. 'நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம்.' யார் யாரிடம் கூறியது? 274. 'இது மனிதக்குரல் அல்ல. கடவுளின் குரல்' யார் யாரைக் குறித்து சொன்னது? 275. பேதுருவுடன் வந்திருந்த யூதர்கள் மலைத்துப் போனதேன்? 276. அவர்கள் ............வெளியேறினவுடனேயே..................எடுத்துச் சென்று விட்டார். 277. கடவுள்..................இறைவாக்கினர் ஒருவரை................................செய்வார். 278. பேதுரு நடந்து சென்றபோது நிகழ்ந்த அருஞ்செயல்கள் என்ன? 279. 'நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச்செய்துவிட்டீர்கள்.' யார் யாருக்கு கூறியது? 280. யோவான் திருமுழுக்குக் கொடுத்து வந்த......................................... வேண்டும். 281. 'பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை.' இடஞ்சுட்டி பொருள் விளக்கு. 282. பவுல் சீலா சிறையிலிருந்தபோது(பிலிப்பியில் ) நள்ளிரவில் நடைபெற்றது என்ன? 283. லிஸ்திராவில் பவுல் செய்த அற்புதம் என்ன? 284. வானதூதர் பேதுருவை விடுதலை செய்தபின் பேதுரு யார் வீட்டிற்கு சென்றார்? அங்கே பலர் என்ன செய்து கொண்டிருந்தனர்? 285. ஆண்டவர் பணித்த ...........................கட்டியிருக்கிறோம.; 286. 'நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?' யார் யாரிடம் கேட்டது? 287. ...........அங்கிருந்து தப்பி ..........நாட்டுக்கு சென்று அந்நியராக வாழ்ந்து வந்தார். 288. பேதுருவிடம் பொய் சொன்னதும் விழுந்து இறந்த இருவர் யார்? ஏன் எப்படி இறந்தார்கள்? 289. நீங்கள் தூய்மையும்........................................வேண்டிக்கொண்டீர்கள். 290. நீங்களே இன்னும் ................................................... பெறுவீர்கள.; 291. 'அமளியை நிறுத்துங்கள். இவர் உயிரோடு இருக்கிறார்'. இடஞ்சுட்டி பொருள் விளக்கு. 292. குறி சொல்லும் அடிமைப் பெண் பவுல்இ சீலாவைப் பார்த்துக் கூறியது என்ன? பவுலின் பதில் என்ன? 293. தம் அருள் செய்திக்கு சான்றாக ...............வழியாக செய்தார். 294. 'ஆண்டவரின் தூதர் அவனை அடித்தார்.' யாரை? ஏன்? 295. 'இவற்றைக் கொன்று சாப்பிடு.' யார் யாரிடம் கூறியது? 296. 'நீ எழுந்து...............தெற்கு நோக்கிப்போ' என்றார். அது ஒரு பாலைவனப்பாதை 297. 'எங்களுக்கு உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்'? யார் யாரிடம் கூறியது? 298. பவுல் உரோமை நகருக்கு அனுப்பப்பட்டது ஏன்? அவருடன் உரோமைக்கு சென்ற நூற்றுவர் படைத்தலைவன் யார்? 299. பவுல் மால்தாவுக்கு ஏன் எப்படி சென்றார்? அங்கு செய்த புதுமைகள் என்ன? 300. உரோமையில் பவுலின் நற்செய்தி பணிப் பற்றி கூறு.